லாரி ஓட்டுனர் துண்டு துண்டாக வெட்டி கொலை.. கிணற்றில் மிதந்த லாரி ஓட்டுனரின் உடல் பாகங்கள் மீட்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே லாரி ஓட்டுநரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி சென்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தாரமங்கலம் சீரங்கனூர் மாட்டுக்காரன் வளவு பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான மணியை காணாததால் அவருடைய உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் தாரமங்கலம் அருகே உள்ள விவசாய கிணற்றில் நேற்று அவர் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.