கடலூர் மாவட்டம் அருகே சமிட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவர் மகன் ராம்பிரசாத் விவசாயி. இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால் ராம் பிரசாத்துக்கு இந்தத் திருமணத்தில் சம்மதம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, ராம்பிரசாத் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் ராம் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, ராம் பிரசாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.