கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாண்டிச்சேரி சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் ரகுமான்(30). இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது விருதாச்சலம் மேம்பாலம் உளுந்தூர்பேட்டை அருகே வேன் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதைப் பார்த்த ஓட்டுனர் ரகுமான் அதிர்ச்சடைந்து உடனே வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.