”வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்..” – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்..!

புதுச்சேரியில் எவ்வித அரசு உதவியும் பெறாத,  வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை  வழங்கும் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுதொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ரங்கசாமி  வெளியிட்டிருந்தார்.

இத்திட்டத்துக்கான கோப்புகள் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, அதற்கு தற்போது  ஒப்புதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.