Pongal 2023: காணும் பொங்கலுக்கு தயாராகி வரும் வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா நோய் தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக மக்களின் கூட்டம் குறைந்திருந்த நிலையில் தற்போது நிலைமை சீரானதால் இந்த ஆண்டு் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பார்வையாளர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்படுகள் செய்யபட்டுள்ளதாக பூங்க நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

அதில் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் இடத்தில் பொதுமக்களிடையே நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு 20 டிக்கெட் கவுன்டர்கள் முழுமையாகச் செயல்படுவதோடு. கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படும். மேலும், ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு கவுன்டர் அமைக்கப்படும். பார்வையாளர்களை வரிசையில் சீராகவும், விரைவாகவும் அனுப்ப ஒவ்வொரு டிக்கெட் கவுன்டரையும் சவுக்கு கொம்புகள் கொண்டு தனியாக தடுப்பு அமைக்கப்படும்.

நுழைவுசீட்டு வழங்கிய பிறகு. பூங்காவினுள் பார்வையாளர்கள் விரைவாக செல்வதற்கு ஒரே நேரத்தில் 10 வரிசைகளில் சோதனை செய்யப்பட்டு தடைசெய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பூங்கா நுழைவு வாயிலிலேயே காவல் துறையின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்படும். மேலும் மூன்று எண்ணிக்கையிலான மெட்டல் டிடெக்டர்கள் நிறுவப்படும்.

வாகன நிறுத்துமிடத்திலிருந்து பூங்கா நுழைவாயிலுக்கு பார்வையாளர்களை அழைத்து வர 7 எண்ணிக்கையிலான மினி பஸ் மற்றும் பூங்கா வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை நாட்களில், பார்வையாளர்களின் வசதிக்காக, வண்டலூர் வழித்தடத்தில் கூடுதலாக 150-ற்கும் மேலான பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகத்தை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 வயதுக்குட்பட்ட சிறியவர்கள் காணாமல் போகும் சூழ்நிலைகளைத் தவிர்க்க சிறியவர்களின் கைகளில் மணிக்கட்டு பட்டை கட்டப்பட்டு அதில் பெற்றோர்களின் தொலைபேசி எண்கள் எழுதப்படும்.

கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில், காவல்துறை ஊழியர்களுடன் கண்காணிப்பு கேமரா ஆபரேட்டர்கள் தொடர்ந்து கண்காணித்து, குழந்தை காணாமல் போகும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், குழந்தைகளை கண்டறிவதில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்கலிகள் வழங்கப்படும்

16.01.2023 மற்றும் 17.01.2023 ஆகிய தேதிகளில் பார்வையாளர்களுக்காக சிறப்பு உதவி மையம் மற்றும் மருத்துவ உதவி மையம் பூங்காவின் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.

மருத்துவக் குழுவுடன் 4 எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் உயிரியல் பூங்காவிற்குள் எந்த அவசரச் சூழலையும் கையாள நிறுத்தப்படும்.

பூங்காவில் உள்ள கழிப்பறைகளுடன், கூடுதலாக 15 எண்ணிக்கையிலான உயிரி கழிப்பறைகள் பூங்காவின் பல்வேறு இடங்களில் வைக்கப்படும். தடையில்லா தண்ணீர் வழங்க ஏற்பாடு
மின்சாரம் மற்றும் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்காக கூடுதலாக 23 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பூங்கா நிர்வாகம் காவல் துறையினரை தொடர்பு கொண்டு பொங்கல் விடுமுறை நாட்களில் பூங்காவினுள் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து ஒழுங்குமுறை, செயின் பறிப்பு மற்றும் பர்ஸ் திருட்டு போன்ற குற்ற செயல்களைத் தவிர்க்கும் பொருட்டு போதிய காவலர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, வேலூர் மற்றும் விழுப்புரம் மண்டலங்களில் இருந்து 100 எண்ணிக்கையிலான வனத்துறையைச் சேர்ந்த சீருடை பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

• பல்வேறு கல்லூரிகளிலிருந்து 100 எண்ணிக்கையிலான NCC & NSS தன்னார்வலர்களும் பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

• விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் விலங்குகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

* பார்வையாளர்களுக்காக உடுதல் அங்கீகரிக்கப்பட்ட குத்தகை விற்பனை நிலையங்கள் / உணவகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

17.01.2023 அன்று செவ்வாய்கிழமை பொது விடுமுறை என்பதால் கானும் பொங்கல் காரணமாக அன்று பார்வையாளர்களுக்காக பூங்கா திறக்கப்படும். பார்வையாளர்கள் வெளியேற இரண்டு தனித்தனி வழிகள், ஒரு வழி பேருந்து நிலையம் செல்வதற்க்கும் மற்றொன்று கார் பார்க்கிங் செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.