பைக்கை விலைக்கு வாங்க வந்த இளைஞர் ஓட்டிப் பார்ப்பதாக கூறி பைக்குடன் மாயம்

புதுச்சேரி சேதராப்பட்டில் தனியார் நிறுவன ஊழியரிடம் பைக்கை  விலைக்கு வாங்க வந்ததாக கூறி, இளைஞர் ஒருவர் அதை நைசாக எடுத்துக் கொண்டு மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், அச்சரம்பட்டு பகுதியில் தங்கியிருந்து புதுச்சேரியில் வேலை செய்து வருகிறார்.  பைக்கை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் அவர் விளம்பரம் செய்தார்.

அந்த பைக்கை வாங்க வந்திருப்பதாக கூறி ரமேஷ் என்பவர்  ராஜேசை சந்தித்தார். பின்னர்  பைக்கை ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக கூறி, பைக்கை எடுத்துச் சென்றவர் திரும்பவில்லை. இதையடுத்து  ராஜேஷ் அளித்த புகாரின்பேரில்   ரமேசை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.