முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து உற்சாகப்படுத்திய முதலமைச்சர்

சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த திருஸ்டீபன்ராஜ் மற்றும் திருமதி சௌபாக்கியம் நம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அரிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது.

தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை எலத்தார்.

இதுகுறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிந்தவுடன், சிறுமி டேனியாவிற்கு அருவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, ஈவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிரிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், 29.8.2022 அன்று சவீதா மருந்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதனைமச்சர் அவர்கள் இன்று (8.2.2023) இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டாளியாயின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தயறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி, தொடர் சிகிச்சைக்கு தேவையான அமைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறுமி டானியாவின் தாய் நிருமதி சௌபாக்கியம் அவர்கர். தனது இல்லத்திற்கு நேரில் வந்து மகளை நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தாப்படும் என்று தெரிரித்ததற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச பொன்முடி மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு சா.மு.நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.