சென்னை; மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் குட்கா-பான் மசாலா தடை உத்தரவை ரத்து செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றல் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. மறைந்த ஜெயலலிதா முதலாமைச்சராக இருந்தபோது, கடந்த 2018ம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடை […]
