ரஷ்ய அதிபரைச் சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்; சீனா முகம் சுளிப்பு.!

உக்ரைன் நேட்டோவில் இணையப் போவதாக அறிவித்த பின்பு, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா படையெடுத்தது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக நீடிக்கும் இந்த போர், அணு ஆயுத போருக்கும் மற்றும் மூன்றாம் உலகப் போருக்கும் வித்திட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர் கருதுகின்றனர். ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்க கூடாது என அமெரிக்கா ஏகாதிபத்தியம் செய்த நிலையில், இந்தியா அதை கொள்முதல் செய்து வருகிறது.

இந்தியா- ரஷ்யா இடையேயான நீண்டகால நட்பு இன்னும் தொடர்ந்து வருவதற்கு இது சாட்சியாக உள்ளது. அதேபோல் இந்தியாவின் முதன்மை எதிரியான சீனாவும், அவ்வப்போது எல்லையில் வாலாட்டி வருகிறது. இந்தநிலையில் ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு இன்று ரஷ்யாவில் நடந்துள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இன்று மாஸ்கோவில் பரந்த அளவிலான விவாதங்களை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை செயல்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.

மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்களில் கவனம் செலுத்தியதாகக் கூறியது, ஆனால் அது பிரச்சினைகளை விரிவாகக் கூறவில்லை. “தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிபரான புடினை சந்தித்தார். இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்களில் பரந்த விவாதம் நடைபெற்றது. இந்தியா-ரஷ்யா மூலோபாய கூட்டாண்மையை செயல்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்” என்று ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்தது.

தோவல் தனது இரண்டு நாள் ரஷ்யா பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். கடந்த திங்களன்று, புதுடெல்லிக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், இந்தியாவுடனான தனது உறவுகளை மேலும் பன்முகப்படுத்த ரஷ்யா விரும்புகிறது என்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நாட்டிற்குச் சென்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஷ்யாவிற்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரும் தங்கள் பொருளாதார ஈடுபாட்டை விரிவுபடுத்துவதாக உறுதியளித்தனர்.

கோடிகளில் குவியும் காணிக்கை

நேற்று ரஷ்யா நடத்திய ஆப்கானிஸ்தான் மீதான பாதுகாப்பு கவுன்சில்கள் செயலாளர்களின் ஐந்தாவது கூட்டத்தில் அஜித் தோவல் கலந்து கொண்டார். கூட்டத்தில், எந்த நாடும் ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பை பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், ஆப்கானிஸ்தான் மக்களை அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் இந்தியா ஒருபோதும் கைவிடாது என்றும் தோவல் கூறினார்.

‘நான் அதிர்ஷடசாலி’ – இஸ்லாமியரால் குத்தப்பட்ட சல்மான் ருஷ்டி பேச்சு.!

இந்த கூட்டத்தில் ரஷ்யா மற்றும் இந்தியா தவிர ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தோவலின் மாஸ்கோ பயணம் புதுடெல்லியில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு சில வாரங்களுக்கு முன்னதாக நடந்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.