Thunivu: வினோத்தின் மீது கதை திருட்டு வழக்கு..இயக்குனர் பரபரப்பு புகார்..!

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளின் மூலம் ரசிகர்களளை ஈர்த்து வருகின்றார் இயக்குனர் வினோத். சதுரங்கவேட்டை என்ற தன் முதல் படத்தின் மூலமே தனி ஒரு முத்திரையை பதித்த வினோத் கார்த்தியின் தீரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் பரபரப்பான இயக்குனராக வலம் வர துவங்கினார்.

இதையடுத்து அஜித்தை வைத்து நேர்கொண்டப்பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறினார் வினோத். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்டப்பார்வை திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற அடுத்ததாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Dhanush: தனுஷின் பேச்சால் ஏற்பட்ட சலசலப்பு..கொந்தளித்த ரசிகர்கள்..!

இதைத்தொடர்ந்து கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் துணிவு திரைப்படத்தில் மிகவும் கவனம் செலுத்தினார் வினோத். இதைத்தொடர்ந்து வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கூலிங் கிளாசுடன் மாஸாக வந்த மோகன்லால்!
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் கடந்தாண்டு வெளியான வலிமை திரைப்படத்தின் மீது குறும்பட இயக்குனர் ராஜேஷ் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். அதாவது, தான் இயக்கிய தங்க சங்கிலி என்ற குறும்படத்தில் உள்ள பல காட்சிகளை வினோத் திருடி வலிமை படத்தில் பயன்படுத்தியுள்ளதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேச வினோத்தை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனாலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார் ராஜேஷ். இந்நிலையில் வலிமை படம் வெளியாகி ஓராண்டு கழித்து இயக்குனர் ஒருவர் புகார் அளித்துள்ளது ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.