ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரின் வாழ்த்துச் செய்தியில், “எனது அருமை நண்பர் சி.பி.இராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கிறது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. புதிய பொறுப்பில் அவர் சிறப்பாக செயல்படவும், அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி : “ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நான் பெரிதும் போற்றும் அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு ஆளுநராக தனது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்”
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி : ஜார்க்கண்ட் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் அன்பு நண்பர் சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அன்பாலும், செயலாலும் ஜார்க்கண்ட் மாநில மக்களின் உள்ளங்களை வென்றெடுக்க வாழ்த்துகிறேன்!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி : “ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் அண்ணாவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக பாஜகவின் உறுதியான தொண்டரான அவர், தனது சித்தாந்தத்தை அணிகலனாகக் கொண்டு, தனது அனைத்துப் பொறுப்புகளிலும் தனி முத்திரை பதித்திருந்தார்”.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி : “தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்”
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி : “தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. மக்கள் நலன், மாநில நலன், தேசிய நலன் மிக்க சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பதால் தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்கிறது”