பிரதமர் மோடியை சந்தித்த கன்னட திரையுலகினர்

பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சியை இன்று(பிப்., 13) துவக்கி வைத்தார். இதற்காக பெங்களூர் வந்த பிரதமரை கன்னட திரை உலகை சேர்ந்த கேஜிஎப் பட நாயகன் யஷ் , காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி, புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி மற்றும் ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிர்கந்தூர் ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது பிரதமரிடம் திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை அவர்கள் வைத்தனர். குறிப்பாக வரி தொடர்பான விஷயங்கள், கர்நாடகாவில் திரைப்பட நகரம், வெளிநாடுகளில் இருப்பது போன்று இங்கும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை செய்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். பிரதமரும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.