காதலர் தினத்திற்கு எதிர்ப்பு.. நாய்களுக்கு திருமணம் செய்த இந்து முன்னணியினர்.!

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து அளித்தும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

காதலர் தினங்களில் காதலர்கள் கடற்கரை, பூங்கா, தியேட்டர் என அனைத்து இடங்களிலும் ஜோடியாக சுற்றி வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் உட்பட சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக வட மாநிலங்களில் காதலர் தினங்களில் ஜோடியாக சுற்றும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பது மற்றும் அடித்து துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், காரைக்குடியில் இந்து முன்னணியினர் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.