Rajinikanth: அவர் பாட்ஷாவா, வேண்டவே வேண்டாம், ஆளையே மாற்றிய ரஜினி: விஷயம் இருக்கு

பாட்ஷாவாக அந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கூறியதை கேட்ட ரஜினியோ அவர் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

பாட்ஷாசுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண்ராஜ் உள்ளிட்டோர் நடித்த பாட்ஷா படம் கடந்த 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என ரசிகர்கள் பல காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தான் பாட்ஷா படம் குறித்து சுவாரஸ்ய தகவல் பற்றி பேசப்படுகிறது.
மம்மூட்டிபாட்ஷா படத்தில் மாணிக்கமாக நடித்திருந்தார் ரஜினி. தன் உயிர் நண்பர் அன்வர் பாட்ஷா கொலை செய்யப்பட்ட பிறகு தன் பெயரை மாணிக் பாட்ஷாவாக மாற்றி டானாகிவிடுவார். அந்த மாணிக் பாட்ஷா என்கிற பெயர் இன்றும் பிரபலம். அன்வர் பாட்ஷாவாக நடிக்க சரண்ராஜ் முதல் தேர்வு இல்லையாம். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை தான் தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
சரண்ராஜ்சார் மம்மூட்டியை அன்வராக நடிக்க வைக்கலாமே என ரஜினியிடம் கூறியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. மம்மூட்டி வேண்டாம் சார். நானும், அவரும் சேர்ந்து இப்போ தான் தளபதி படம் பண்ணினோம். மீண்டும் நாங்கள் சேர்ந்து நடித்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும். சரண்ராஜை ட்ரை பண்ணி பாருங்களேன் என தெரிவித்துள்ளார் ரஜினி. அவர் கூறிய பிறகே சரண்ராஜை அன்வர் பாட்ஷாவாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.
தலைவர்ரஜினி பரிந்துரை செய்த சரண் ராஜ் அன்வர் பாட்ஷா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார். தலைவரின் தேர்வு சரி தான் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். பாட்ஷா பற்றி இந்த தகவல் பரவி வரும் நேரத்தில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் சினிமா ரசிகர்கள் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்கள். அது எப்படி சார் நக்மா குழந்தையாக இருந்து குமரி ஆகும் வரை ரஜினி சாருக்கு மட்டும் வயசே ஆகவில்லை என கேட்கிறார்கள்.
ஜெயிலர்காதலர் தினம் 2023, Rajinikanth:காதலியே மனைவியாக பெற்ற பாக்கியசாலிகள் ரஜினி, அஜித், சூர்யா, விஜய்ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்து வருகிறது. இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தலைவர் தன் காதல் மனைவி லதாவை சென்னையில் விட்டுவிட்டு மங்களூரில் இருக்கிறாரே. ரஜினியையும், லதாவையும் பிரித்த பாவம் உங்களை சும்மா விடாது நெல்சன் திலீப்குமார் என்கிறார்கள் ரசிகர்கள். ஜெயிலர் தவிர்த்து தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.