காதலித்த பெண்ணை திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட நண்பனுக்கு கத்திக்குத்து.. சுந்தரபாண்டியன் படப்பாணியில் நண்பர்களுக்குள் மோதல்

கள்ளக்குறிச்சியில், சுந்தரபாண்டியன் திரைப்பட பாணியில், தான் காதலித்த பெண்ணை திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நண்பனை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

புத்தந்தூரைச் சேர்ந்த அஜித்குமாரும், ஏழுமலையும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அஜித்குமார் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் காதலியுடன்  ஏழுமலைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படும் நிலையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஏழுமலையின் முதுகில் அஜித் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.