புதுடெல்லி: அரசியல் சாசனத்தின் 4-வது பகுதியின் ஏ-பிரிவில் உள்ள அடிப்படை கடமைகளை அமல்படுத்த கோரி வழக்கறிஞர் துர்கா தத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் கூறியிருப்பதாவது: அடிப்படை கடமைகளை பின்பற்றாதது, அரசியல் சாசன பிரிவுகளில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு சில சட்டங்களை தவிர அடிப்படை கடமைகளை அமல்படுத்துவதில் சீரான கொள்கை எதுவும் இல்லை.