நாடு மீண்டும் முடங்கும் நிலை..! வெளியான விசேட அறிவிப்பு



எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி அமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தினை மேற்கொள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை சுகாதாரம், கல்வி, துறைமுகம், மின்சாரம், வங்கி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரால் கடந்த 8ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது பல துறைகள் முடங்கியிருந்த நிலையில் பொது மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு, 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.