அதிமுக பிரசாரத்துக்கு ஆள் இல்லாததால் டூரிஸ்ட் வேனில் பாயிண்ட் டூ பாயிண்ட் சர்வீஸ்

அதிமுக வேட்பாளர் தென்னரசு,  நேற்று காலை ஈரோடு கொங்கு கலையரங்கம் பகுதியில் முன்னாள்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மேள, தாளம் முழங்க பிரசாரம் செய்தார். முதல் பாயிண்ட்டில் வந்தவர்களை 2 டூரிஸ்ட் வேனில் ஏற்றி அடுத்தடுத்த இடங்களுக்கு அழைத்து சென்றனர். இப்படி டூரிஸ்ட்  வேனில் பாயிண்ட் டூ பாயிண்ட் சர்வீஸ் செய்தனர்.

வேனில்  அழைத்து செல்லப்பட்டவர்களில் இளைஞர்களின் டி-சர்ட்டில் எஸ்பி  வேலுமணி டீம் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஈரோடு  கொங்கு கலையரங்கம் பகுதியில் ஊர்வலமாக வந்த அதிமுகவினர் சிலர் சாலையின் நடுவே பைக்குகளை  நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.