ஜெர்மனி பிரதமர் ஒலாப் 25ம் தேதி இந்தியா வருகை

புதுடெல்லி: ஜெர்மனியின் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், வருகிற 25ம் தேதி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஜெர்மனியின் பிரதமராக பொறுப்பேற்று ஒரு ஆண்டுக்கு பின் முதல் முறையாக பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் இந்தியா வருவதற்கு திட்டமிட்டுள்ளார். அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் அவருடன் வருகின்றனர். 25ம் தேதி டெல்லி வரும் அவர் 26ம் தேதி கர்நாடகா செல்கிறார். பிரதமர் மோடியுடன் இருநாட்டு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.