ஈரோட்டில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்….. மாறி மாறி ஓட்டு வேட்டை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். பூந்துறை ரோட்டில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

உழவர் சந்தை பகுதியில் அதிமுக நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களை வழங்கி வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தனர். அதே பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இடைத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்ட இடங்களில் துணை ராணுவப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.