செல்வத்தைப் பெருக்கும் சூப்பர் முதலீடு – சென்னைவாசிகளுக்கு ஒர் அரிய வாய்ப்பு… அனைவரும் வருக, வருக!

வீட்டுக் கடன், கார் கடன், கிரெடிட் கார்டு, கல்விக் கடன் என ஏதோ ஒரு கடன் எல்லோரிடமும் இருக்கிறது. கடனில் இருப்பவர்கள் யாருமே தங்களை நிதிச் சுதந்திரத்தோடு இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அதேபோல்தான் மாத வருமானத்தை எதிர்பார்த்து இருப்பவர்களும் நிதிச் சுதந்திரத்தோடு இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

நிதிச் சுதந்திரம் எனில், சேமிப்பும், முதலீடும் இருக்க வேண்டும். வருகிற வருமானம் கடனுக்குச் சரியாக இருக்கிறது என்ற நிலை இருக்கக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட வருமானம் இருக்க வேண்டும். செலவு, சேமிப்பு, முதலீடு எல்லாம் போகவும் உபரியாகப் பணம் இருக்க வேண்டும். அப்படியான நிதி சுதந்திரத்தை ஒரே வழி நம்மிடமிருக்கும் பணத்தை செல்வமாக மாற்றுவது.

மியூச்சுவல் ஃபண்ட்

அந்த செல்வத்தைப் பல மடங்காகப் பெருக்குவதுதான். அதற்கு உதவக்கூடிய முதலீடுதான் பங்குச் சந்தை முதலீடு. ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துக்குள்ளாகும் பங்குச் சந்தையில் எல்லோராலும் நேரடியாக முதலீடு செய்து செல்வத்தைப் பெருக்க முடியாது. அப்படி நேரடியாகப் பங்குச் சந்தையின் பலனை அடைய முடியாதவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான்

மியூச்சுவல் ஃபண்ட். நம்முடைய முதலீட்டுத் தொகை, வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நம்முடைய நிதி இலக்கு ஆகியவற்று ஏற்ற சரியான ஃபண்டைத் தேர்வு செய்து முதலீடு செய்து வந்தால் நம்முடைய ஆசைகளும் கனவுகளும் நிறைவேறாமல் போகாது என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதற்குமுன் மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும், சரியான ஃபண்டை தேர்வு செய்வது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

முதலில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம். அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் நாணயம் விகடன் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட்

அந்தவகையில் நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து சென்னை மாநகரில் மாபெரும் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறது. ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்’ என்ற இந்த நிகழ்ச்சியை வரும் பிப்ரவரி 25-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள வாணி மஹாலில் நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், நிதி ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரை ஆற்றுகிறார்கள். ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குநர் ஏ.பாலசுப்ரமணியன், முதலீட்டாளர் கல்வி மற்றும் விநியோகப் பிரிவின் மூத்த துணை தலைவர் கே.எஸ்.ராவ் ஆகியோரும் கலந்துகொண்டு முதலீட்டாளர்களுக்கு உள்ள சந்தேகங்கள் குழப்பங்களுக்கு பதில் அளிக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். இந்த அரிய வாய்ப்பை சென்னை வாசிகள் தவறவிடாதீர்கள். முன்பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla என்ற லிங்கில் பதிவு செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.