சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க தூதரக வழிமுறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
