தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்.. வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சி அளிப்பதுடன் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்னையை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்துச் சென்று மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.