நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு: வெளியாட்கள் வெளியேற தேர்தல் அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரத்தை முடித்து கொள்ள வேண்டும் வேண்டும் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 27ல் நடைபெற உள்ள இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்கிறது. அனுமதி அளிக்கப்பட்ட 107 தேர்தல் பணிமனைகளை நாளை மாலைக்குள் கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும்.

வெளி மாவட்டங்களை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் நாளை மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவித்தார். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மட்டுமின்றி வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. பரிசுப்பொருட்கள் அளித்ததாக 2 வழக்குகள் பதிந்துள்ளோம். பரிசுப்பொருட்கள் குறித்த புகார்கள் தொடர்பாக விசாரிக்கிறோம். அதிகாரபூர்வ குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறோம் எனவும் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.