#போலி_டாக்டர்_பட்டம் : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பறந்த நோட்டீஸ்.! போலீஸ் அதிரடி.! 

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு முத்திரையை முறைகேடான வகையில் பயன்படுத்தி சினிமா பிரபலங்கள் பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டமானது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் இந்த பட்டத்திற்கும் எங்கள் பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த நிலையில் இது குறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  இதையடுத்து இத்தகைய போலி டாக்டர் பட்டத்தை பணம் வாங்கிக்கொண்டு பிரபலங்களுக்கு வாரி வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகினார். 

மேலும், அவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு காவல்துறை சார்பில், நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், போலி கௌரவ டாக்டர் பட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்த அனுமதி வழங்கியது யார்? எதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது? என்ற பல்வேறு  கேள்விகளுடன் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.