வரும் 8ம் தேதி ஆஸி. பிரதமர் இந்தியா வருகை

புதுடெல்லி: ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கடந்த ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகிறார். வருகின்ற 8ம் தேதி இந்தியா வரும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா- ஆஸ்திரேலியா உறவை மேம்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மார்ச் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.