கேரளாவில் யோகா படிக்க வந்த பெல்ஜியம் நாட்டு பெண் பலாத்காரம்: வைத்தியர் கைது

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் யோகா படிக்க வந்த பெல்ஜியம் நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்த நாட்டு வைத்தியர் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம்  அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. நாட்டு வைத்தியர். அந்த  பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். நெய்யார் அணைப்  பகுதியில் யோகா பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள ஒரு  மையத்தில் யோகா பயிற்சிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெல்ஜியம்  நாட்டை சேர்ந்த இளம்பெண் வந்தார். அவர் அங்குள்ள ஒரு விடுதியில்  தங்கியிருந்தார்.

விடுதியில் வைத்து பெல்ஜியம் நாட்டுப் பெண்ணுடன் ஷாஜிக்கு  பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தனது ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு  வருமாறு அவரை ஷாஜி அழைத்து உள்ளார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு பெல்ஜியம் நாட்டு இளம்பெண் ஷாஜியின் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சென்றார். அப்போது அங்கு  வைத்து இளம்பெண்ணை ஷாஜி மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது  குறித்து அவர் நெய்யார் அணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வைத்தியர் ஷாஜியை கைது செய்தனர்.  தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.