நிகோபார் தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவு

போர்ட்பிளேர்: நிகோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.