விமானப்படையில் முதல்முறை போர் பிரிவில் பெண் அதிகாரி| First woman officer in combat wing in Air Force

புதுடில்லி :நம் விமானப்படையில், ‘குரூப் கேப்டன்’ ஷாலிஸா தாமி, மேற்கு பகுதிக்கான விமானப் படையின் முன்கள போர்ப்படை அணியின் தலைமை பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பதவிவகித்து வந்த பெண் அதிகாரிகள் 50 பேர், உத்தரவு பிறப்பிக்கும் உயர் பொறுப்புக்குசமீபத்தில் முதல்முறையாக பதவி உயர்வுபெற்றனர்.
இந்நிலையில், விமானப்படையில் ஹெலிகாப்டர் பைலட் ஆக சேர்ந்து, குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்ற பெண் அதிகாரி ஷாலிஸா தாமி, விமானப் படையின் முன்கள போர்ப்படை அணியின் தலைமை பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்இந்திய விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக, பெண் அதிகாரி ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படுவது இதுவே முதல்முறை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.