
வெயில் அதிகம் உள்ளதால் இனி பள்ளிகள் அரை நாட்கள் மட்டுமே செயல்படும் என தெலங்கானா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு 36 முதல் 38 டிகிரி என்று பதிவாகி வருகின்றது. அதீத வெயிலால் பள்ளி மாணவர்கள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 24, 2023 வரையிலான கடைசி வேலை நாள் வரை அரை நாட்கள் மட்டும் நடைபெறும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுபள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் காலை 8 மணி முதல் மதியம் 12:30 மணி வரை அரை நாள் பள்ளிகளாக செயல்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்துவதற்கான சிறப்பு வகுப்புகள் தொடரும். அதேபோல 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in