காதல் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்கள் கைது..!

கோவை அருகே காதல் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்ட 10  மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த இசை பூங்குன்றன் கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவரும், அபிஷேக் என்ற மற்றொரு மாணவரும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட தகராறில் அபிசேக் நண்பர்கள் 6 பேர் இசைபூங்குன்றனை காரில்  கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை அறிந்த பூங்குன்றன் ஆதரவாளர்கள் அபிசேக்கை கடத்தி சென்று தாக்குதல் நடத்தியதில் அவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.