அழகிய நாய்க்குட்டியை சிறைப்பிடித்த குரங்கு: சமீபத்திய சம்பவங்களால் அச்சமடையும் மக்கள்


இந்தியாவின் ஜெய்ப்பூரில் பிரேசன் குரங்கு, நாய் குட்டி ஒன்றை பிடித்து கூரைக்கு மேல் இழுத்து சென்று சிறைப்பிடித்து கொண்ட காட்சிகள் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது.


நாயை சிறைப்பிடித்த குரங்கு

இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் இந்து கோவில் ஒன்று குரங்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது, குரங்குகளை பார்க்க விரும்புவோருக்கு இந்த நகரம் மிகப்பெரிய சுற்றுலா மையமாக நிச்சயம் திகழும்.

ஜெய்ப்பூர் நகரில் குரங்குகளின் பெரிய காலனி படைகளையே பார்க்க முடிகின்ற நிலையில், அவைகளின் அட்டகாசம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில் அவ்வப்போது தொடர்ந்து வெளியாகி வருகிறது.

 

அழகிய நாய்க்குட்டியை சிறைப்பிடித்த குரங்கு: சமீபத்திய சம்பவங்களால் அச்சமடையும் மக்கள் | Monkey Kidnaps Puppy From Busy Street Jaipur

இந்நிலையில் சமீபத்தில் ஜெய்ப்பூரின் பரபரப்பான தெருவில் சுற்றி திரிந்த குரங்கு ஒன்று, கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட சிறிய நாய் குட்டியை சிறைப்பிடித்து கூடையில் மேல் தூக்கிச் சென்றது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் முழுவதும் சனிக்கிழமை அங்கிருந்த நபர் ஒருவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.


நாய் குட்டியுடன் மறைந்த குரங்கு

இது தொடர்பாக வெளியான வீடியோக்களில், குரங்கின் செயலை கண்டு மக்கள் சிரிப்பதைக் கேட்கலாம், ஆனால் அந்த பாவமான குட்டி நாயை காப்பாற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

குரங்கு நின்று கொண்டு இருந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதும், குரங்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தது.

ஒற்றை கையில் நாய் குட்டியை பிடித்து கொண்டு, மற்றொரு கையின் மூலம் அருகிலுள்ள பால்கனிக்கு குரங்கு குதித்தது.

அழகிய நாய்க்குட்டியை சிறைப்பிடித்த குரங்கு: சமீபத்திய சம்பவங்களால் அச்சமடையும் மக்கள் | Monkey Kidnaps Puppy From Busy Street Jaipur

பின்னர் குரங்கு என்ன ஆனது, நாய்க்குட்டிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

ஆனால் சமீபத்திய சம்பவங்கள் மூலம் பார்க்கும் போது நாய்க்குட்டியின் நிலைமை நன்றாக இல்லை என்பது ஊகிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில் இரண்டு குரங்குகள் மஹாராஷ்டிராவில் 250 நாய்களைக் கொன்றதாகக் கூறப்பட்டது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.