'கழக ஒருங்கிணைப்பாளர்'… திரும்பவுமா..? ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை…

மதுரையில் வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து

மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் ஈபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கியது செல்லும் என்பதும் சட்டப்படி எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், தனி நீதிபதி அளித்த அந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்று கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்ட சில இன மக்களுக்கு எதிரான அடக்குமுறை சட்டத்தினை எதிர்த்து 1920 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், பெருங்காமநல்லூரில் போராட்டம் நடைபெற்றபோது அதனை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்த 17 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திடும் வகையில், 03-04-2023 திங்கட்கிழமை அன்று காலை 10-00 மணியளவில், மதுரை மாவட்டம், பெருங்காமநல்லூரில் உள்ள வீரத் தியாகிகள் நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அய்யப்பன், M.L.A., மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், ஆர். கோபாலகிருஷ்ணன், Ex. M.P. மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், இரா. பாண்டியம்மாள், Ex. M.L.A., கழக அமைப்புச் செயலாளர், G.R.ராமமூர்த்தி கழக அமைப்புச் செயலாளர், மார்க்கெட் P.S. கண்ணன் கழக அமைப்புச் செயலாளர், V.R. ராஜ்மோகன் கழக இளைஞரணிச் செயலாளர், கே. முருகேசன் மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள்.

மேற்படி நிகழ்ச்சியில், மதுரை மாநகர், மதுரை புறநகர் தெற்கு மற்றும் மதுரை புறநகர் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள், கழகத்

தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.