நங்கநல்லூர் கோயில் குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி இறந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. 25 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் சாமி சிலையுடன் குளத்தில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி வட்டமாக நின்று மூன்று முறை மூழ்கி எழுந்தனர். குளத்திற்குள் பூக்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் தண்ணீரில் தத்தளித்ததை அடுத்து அவரைக் காப்பாற்ற நான்கு பேர் உதவிக்கு சென்றனர். மற்ற அர்ச்சகர்கள் மற்றும் தீர்த்தவாரியை காண வந்திருந்த […]
