DMK Files என்ற பெயரில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சில விவரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்ப முயற்சித்தார். ஆனால் பெரிதாக எடுபடவில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் பார்ட் 2, பார்ட் 3 என அடுத்தடுத்து விவரங்கள் வெளியாகும் என்று கூறி அனலை கிளப்பியுள்ளார். இந்த சூழலில் PTR Files என்று குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஒரு விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பிடிஆர் ஆடியோ
அதாவது, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”ஒரே வருடத்தில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களின் மூதாதையரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்சினையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என சிறுக சிறுக குவித்தது.
உதயநிதி, சபரீசன்
அது தோராயமாக ஒரு 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்” என்று பேசியுள்ளார். இந்த ஆடியோவை வெளியிட்டதில் பழிவாங்கும் நடவடிக்கையா? வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்று சமயம் தமிழ் சார்பில் சவுக்கு சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஆடியோ அவருடையது தான். அமைச்சர் பிடிஆர் உடன் பணியாற்றிய நபர்களிடம் அனுப்பி சரி பார்த்தேன். அவர்களும் அமைச்சரின் குரல் தான் என உறுதி செய்துவிட்டனர்.
பழனிவேல் தியாகராஜன் புகார்
இல்லையென்றால் மாநகர காவல்துறையில் சென்று அவர் புகார் கொடுக்கட்டும். இப்படி ஒரு ஆடியோவை பொதுவெளியில் வெளியிடுவது நூற்றுக்கு நூறு சரி. 30 ஆயிரம் கோடி ரூபாய் பணம் சேர்த்தது கட்சி பிரச்சினையா? உதயநிதி மற்றும் சபரீசனை பொதுவெளியில் தலைவர்கள் என்ற வகையில் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உள்ளுக்குள் இவ்வளவு சம்பாதித்து விட்டார்களே என்ற குமுறல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
30 ஆயிரம் கோடி சொத்து
10 ஆண்டுகள் விட்டதை ஒரே ஆண்டில் சம்பாதித்து விட்டனர். திராவிட இயக்கத்தின் மிக முக்கிய இடத்தில் இருக்கும் இருவர் தலா 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்கள் என்றால் அதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக தான் ஆடியோவை வெளியிட்டேன் என்று கூறினார். இதையடுத்து ”விரைவில் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு வரப் போகிறாரா? விவாதிப்போம்” எனப் போட்ட பதிவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
துர்கா ஸ்டாலினுக்கு சென்ற விஷயம்
அதற்கு, 9 மாதங்களுக்கு முன்பாக நிதியமைச்சரை மாற்றி விட்டு தங்கம் தென்னரசுவை நியமிக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்தது. தற்போது அது மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் நான் வெளியிட்ட வீடியோவை துர்கா ஸ்டாலின்,
, சபரீசன் உள்ளிட்டோர் கேட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனவே நிதியமைச்சரை மாற்றி விடலாமா? ஒரே தலைவலியாக இருக்கிறதே? என ஆலோசித்துள்ளனர். இதனால் தான் தங்கம் தென்னரசு பற்றிய பதிவை போட்டேன். இந்த அரசில் மகனும், மருமகனும் நிழல் முதலமைச்சர்களாக இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறேன். அதை அரசின் நிதியமைச்சரே உறுதி செய்துள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார்.