பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய நாய்: துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதிகாரிகள்


பிரித்தானியாவின் டெர்பியில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய நாய் ஒன்றை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.


நாயை சுட்டுக் கொன்ற அதிகாரிகள்

பிரித்தானியாவின் டெர்பியில் உள்ள நபர் ஒருவர் நாய் ஒன்றால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்ததை தொடர்ந்து, அந்த நாயை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த நாய்  பொதுமக்களுக்கு “ஆபத்தை முன்வைக்கிறது” என்ற புகார் எழுந்ததை தொடர்ந்து, அந்த விலங்கை அதிகாரிகள் சனிக்கிழமை கேமரூன் சாலையை சுற்றி வளைத்தனர்.

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய நாய்: துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதிகாரிகள் | Uk Derby Police Shot The Dog

பின்னர் துப்பாக்கி அதிகாரிகளால் நாய் கொல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

எந்த ஆபத்தும் இல்லை

சனிக்கிழமை பிற்பகலில் சம்பந்தப்பட்ட பகுதிகளை சுற்றி பொலிஸார் தங்கியிருந்தனர்.

அத்துடன் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை மற்றும் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்வதால் அதிகாரிகள் அப்பகுதியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய நாய்: துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதிகாரிகள் | Uk Derby Police Shot The DogTom Maddick / SWNS

இதற்கிடையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாய் என்ன இனம் என்பது இன்னும் தெரியவில்லை. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.