
தனது கதை தேர்வு குறித்து மனம் திறந்த பூஜா ஹெக்டே!
நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சல்மான் கானுக்கு ஜோடியாக . கிஸி கி ஜான் கிஸி கி பாய் படத்தில் நடித்தார். இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பூஜா ஹெக்டே கதை தேர்வு செய்யும் முடிவு குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்
அவர் கூறுகையில், “நான் ஒன்றும் சினிமா குடும்ப பின்னனியில் இருந்து நடிக்க வரவில்லை. என்னை தேடி ஒரு நாளைக்கு 20 கதைகள் வருவதற்கு நான் சாதாரண குடும்பத்தில் இருந்து நடிக்க வந்துள்ளேன். எனக்கு தேடி வரும் கதையில் நான் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.