நான் எப்படா என்னைய மியா கலிபான்னு சொன்னேன்! நெட்டிசன்களுக்கு வீஜே பார்வதி பதிலடி

வீஜே பார்வதி குறித்து சில நெட்டீசன்கள் தொடர்ந்து மோசமான கமெண்டுகளால் கலாய்த்து வருகின்றனர். அதையெல்லாம் தைரியமாக எதிர்கொண்டு சமாளித்து வரும் பார்வதி, ஊடகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார். அந்த வகையில் தன்னை பற்றி வந்த நெகட்டிவான கமெண்டுகளை வைத்தே புதிதாக ஒரு கண்டண்ட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் ஒருவர் வீஜே பார்வதியை தமிழ்நாட்டு மியா கலிபா என்று ஒப்பிடுவதை குறிப்பிட்டு, 'அவர் நல்லவர் நீங்கள் அவரை போல் இமிட்டேட் செய்து உங்களை நீங்களே புரோமோட் செய்து கொள்கிறீர்கள்' என்று சொல்லியிருந்தார். அதற்கு பதிலளித்த பார்வதி, 'நான் எப்படா என்னைய மியா கலிபான்னு சொன்னேன். நான் எப்ப அவங்க மாதிரி இமிட்டேட் பண்ணேன். நீங்களா தானடா பேர் வைக்கிறீங்க' என்று கலாய்த்துள்ளார். அதேபோல் பார்வதியின் ஆடைகுறித்தும் அவரை பாடிஷேமிங் செய்தும் மோசமான வார்த்தைகளால் திட்டியவர்களின் கமெண்டுகளை படித்து காண்பித்து, 'திட்டுவதாக இருந்தால் உங்களை நீங்களே திட்டிக்கொள்ளுங்கள். ஏன் பெண்களை திட்டுகிறீர்கள். நான் என் உழைப்பில் வாங்கிய உடையை அணிகிறேன். அது என் இஷ்டம். நீங்களா எனக்கு டிரெஸ் வாங்கி தருகிறீர்கள்?' என கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.