ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜூலை 21-ந்தேதி வரை சிறை – இலங்கை கோர்ட்டு தீர்ப்பு

கொழும்பு,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் அவ்வபோது நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

மீனவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து மீனவர்கள் 15 பேரையும் வரும் ஜூலை 21-ந்தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.