அடுத்த சில நாட்களுக்கு இதான் ட்ரெண்ட்… தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் என பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

உள் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை பொழிவு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி ஜம்மு, இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாவட்டங்களில் 200 மிமீ மழையும் சில இடங்களில் 300 மிமீ வரை பலத்த மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றும் அதேபோல் 200 முதல் 300 மிமீ வரை பலத்த மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கபடுவதாகவும் தமிழ் நாட வெதர்மேன் தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மணாலி-தரம்சாலா போன்ற இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் தமிழ் நாடு வெதர்மேன் தனது டிவீட்டில் பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில், இன்று கேடிசிசி பெல்ட் அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டில் டமால் டுமீல் மழை தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களுக்கு இதுதான் ட்ரெண்ட் மற்றும் பேட்டர்ன் என்றும் தமிழ் நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் வட தமிழ்நாட்டில் கேடிசிசி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பொழிவு இருக்கும் என்றும் தமிழ் நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.