சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று(ஜூலை 17) காலை முதல் நெய்யபிேஷகம் நடக்கிறது.
நேற்று மாலை 5:00 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி இங்கு நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு பூஜைகள் நடைபெறவில்லை. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து நிர்மால்யதரிசனம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ேஹாமத்துக்கு பின்னர் வழக்கமான உஷபூஜை, உச்சபூஜை நடைபெறும்.
ஜூலை 21 வரை எல்லா நாட்களிலும் மதியம் 25 கலசாபிேஷகம், களபாபிேஷகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். ஐந்து நாட்களும் உதயாஸ்மனபூஜை உண்டு. ஜூலை 21- இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக ஆக., 9 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். ஆக.10 நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement