எடப்பாடிக்கு நெருக்கடி.. கோடநாடு வழக்கு போராட்டத்தில் இணையும் ஓபிஎஸ் – டிடிவி தினகரன்.. பதறும் அதிமுக

சென்னை:
கோடநாடு வழக்கில் விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆகஸ்ட் 1-ம் தேதி நடத்தவுள்ள போராட்டத்தில் அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் பங்கேற்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அதிமுகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓய்வு இடமாக இருந்தது. அவர் மறைந்த பின்னர், கடந்த 2017-இல் அந்த எஸ்டேட் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் அந்த எஸ்டேட்டின் காவலாளி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் 8-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவத்துக்கு பிறகு பல விபத்துகள், தற்கொலைகள் அரங்கேறி தமிழகத்தையே உலுக்கின. அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்றாலும், பெரிய அளவில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, திமுக ஆட்சி வந்ததற்கு பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அடிபட்டது. இதனால் இந்த வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஓஎம்ஆர்-க்கு இன்னைக்கு நைட்டு போறீங்களா.. வெதர்மேன் பரபர “வார்னிங்”

இந்நிலையில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தை தனது பலத்தை காட்டுவதற்காகவும், எடப்பாடிக்கு நெருக்கடியை உருவாக்குவதற்காகவும் பயன்படுத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இந்த சூழலில், தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமமுக தலைவர் டிடிவி தினகரனும் பங்கேற்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.