US support to the central government | மத்திய அரசுக்கு அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்:’மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கிறோம்’ என, அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த நிருபர் ஒருவர், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு வேதாந்த் படேல் கூறியுள்ளதாவது:

ஏற்கனவே நாங்கள் கூறியபடி, மணிப்பூர் விவகாரத்தில் அமைதியாகவும், சுமுகமாகவும் தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்னையை மத்திய அரசு மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும். உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டங்களை, பாலியல் ரீதியிலான வன்முறையாக்குவது ஏற்புடையதல்ல. இது போன்ற சம்பவங்கள் நாகரிக சமூகத்துக்கு மிகப் பெரும் அவமானம் என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.