புதுடில்லி: தேசியவாத காங்., கட்சி தொடர்பாக சரத்பவார், அஜித்பவார் ஆகிய இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சி மூத்த தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் , முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்துதுணை முதல்வராகவும், அவரது ஆதரவாளர்கள் எட்டு பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில் கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு தனக்கு உள்ளதாக அஜித் பவார் கூறியுள்ளார். தொடர்ந்து கட்சி , அதன் சின்னம் தனக்கே சொந்தம் என அஜித்பவார் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ள. இது தொடர்பாக சரத்பவார், அஜித்பவார் இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக 3 வாரங்களுக்குள் சமர்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement