குவிட்டோ ஈகுவடார் நாட்டின் தேர்தல் பிரசாரத்தின் போது அதிபர் வேட்பாளர் பெர்னண்டோ விலாவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஈகுவடார் நாடு தென்னமெரிக்காவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. இந்த நாடு போதைப்பொருள் கடத்தல் அதிகளவு நடக்கும் நாடாகவும், வன்முறைகளுக்குப் பெயர் பெற்றதாகவும் உள்ளது. இந்த நாட்டின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ என்பவர் உள்ளார். விரைவில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதால், இதில் போட்டியிட்டு வெற்றி பெற பெர்னாண்டோ விலாவிசென்சியோ என்பவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று, தலைநகர் குவிட்டோவில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு ஒருவர் திடீரென […]
