திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் ஓட்டையன்காடு தோட்டத்தில் வசித்து வருபவர் விவசாயி ஈஸ்வரமூர்த்தி (63). இவரது மனைவி முத்துலட்சுமி (45). இந்தத் தம்பதிக்கு இளங்கவி என்ற மகனும், வாணிஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர்.
இன்று காலை ஈஸ்வரமூர்த்தி தன்னுடையத் தோட்டத்திலிருந்து பால் கறந்துவிட்டு அதை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈஸ்வரமூர்த்தியை வழிமறித்து அவரது அண்ணன் பழனிசாமி (65) அரிவாளால் வெட்டியதில், ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார், ஈஸ்வரமூர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தாராபுரம் போலீஸார், “பழனிசாமிக்கும், ஈஸ்வரமூர்த்திக்கும் சொத்து தகராறு இருந்து வந்திருக்கிறது. பழனிசாமி மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில், சொத்து தகராறில் ஏற்பட்ட விரோதம் காரணமாக ஈஸ்வரமூர்த்தியை வெட்டிக் கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது. கொலை தொடர்பாக பழனிசாமி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்” என்றனர்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs