30 கி.மீ தூரம் தான்… ORR சாலையில் 2 மணி நேரம் ஆகுது… மூச்சுத் திணறும் BMTC பேருந்துகள்… ஏன் இந்த சிக்கல்?

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள வெளிவட்ட சாலை (Outer Ring Road) ஆனது சுமார் 60 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இதற்கு டாக்டர். புனீத் ராஜ்குமார் ரிங் ரோடு எனப் பெயர் வைத்துள்ளனர். கடந்த 1996 – 2002 காலகட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் சாலைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சாலையானது அனைத்து முக்கியமான நெடுஞ்சாலைகளையும் இணைத்து விடுகிறது.

வெளிவட்ட சாலை (ORR) கனெக்‌ஷன்உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் துமகுரு ரோடு, ஏர்போர்ட் ரோடு, ஓல்டு மெட்ராஸ் ரோடு, ஓசூர் ரோடு, பன்னர்கட்டா ரோடு, கனகபுரா ரோடு, மைசூரு ரோடு, மகதி ரோடு ஆகியவற்றை சொல்லலாம். வெளிவட்ட சாலையானது பெங்களூரு மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை இணைக்கிறது. ஹெப்பல், கிருஷ்ணராஜபுரா, மடிவாலா, ஜே.பி.நகர, நந்தினி லே அவுட், கெங்கேரி சாட்டிலைட் டவுன் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.​ஐடி நிறுவனங்கள்இந்த சாலையில் ஐடி நிறுவனங்கள் பலவும் காணப்படுகின்றன. புதிய நிறுவனங்களின் வருகைக்கும் பஞ்சமில்லை. இதனால் மிகவும் பிஸியான சாலைகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் பெங்களூரு வெளிவட்ட சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது சில்க் போர்டில் தொடங்கி பெல்லந்தூர், மாரதஹள்ளி, இஸ்ரோ, மகாதேவபுரா வழியாக கே.ஆர்.புரம் வரை நீள்கிறது.
ப்ளூ லைன் மெட்ரோ பணிகள்இதற்கான பணிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் (BMRCL) மேற்கொண்டு வருகிறது. வரும் 2025-26ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடம் சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து கே.ஆர்.புரா, நாகவரா, ஹெப்பல் வழியாக கெம்பகவுடா சர்வதேச விமானம் (KIA) வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை ப்ளூ லைன் என்று அழைக்கின்றனர். இதன் முதல்கட்ட பணிகள் தான் சில்க் போர்டு முதல் கே.ஆர்.புரம் வரை நடந்து வருகின்றன.​திணறும் பெங்களூரு மாநகரப் பேருந்துகள்குறிப்பாக சென்ட்ரல் சில்க் போர்டு முதல் ஹெப்பல் வரை மெட்ரோ ரயில் பணிகளால் போக்குவரத்து மூச்சு திணறி கொண்டிருக்கிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தை கடக்க பெங்களூரு மாநகரப் பேருந்துகளுக்கு (BMTC) 2 மணி நேரத்திற்கு மேல் ஆவதாக பயணிகள் கூறுகின்றனர். வழக்கமாக வெளிவட்ட சாலையில் மாநகரப் பேருந்துகள் 2,179 முறை ஒரு நாளில் கடந்து சென்றுவிடுகின்றன.
பீக் ஹவரில் கால தாமதம்ஒரு பயணத்தை முழுமை செய்ய 1.4 மணி நேரம் என மாநகரப் போக்குவரத்து கழகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பீக் ஹவர்களில் 2 முதல் 2.5 மணி நேரம் வரை ஆகிறதாம். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வீரன்னபால்யாவில் இருந்து ஹெப்பல் வரையிலான 2 கிலோமீட்டர் தூரத்திற்கு 30 நிமிடங்கள் வரை ஆவதாக கூறுகின்றனர்.​மாற்று யோசனைகள்இத்தகைய சிக்கல்களால் வெளிவட்ட சாலையில் பயணிக்கும் வாகனங்கள், செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு சில மாற்று ஆலோசனைகளை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் எம்.என்.அனுசேத் முன்வைத்துள்ளார். அதாவது, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை (Work From Home) செய்யும் வசதியை அளிக்க வேண்டும். கார், பைக் ஆகியவற்றுக்கு பதிலாக சில நாட்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம். இல்லையெனில் அலுவலக வாகனங்கள் மூலம் வர அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.