ஹிமாச்சல் டூ ஆந்திரா… கனமழை தொடரும்… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இயற்கையின் இந்த பேரிடரால் ஹிமாச்சலப் பிரதேசமே உருக்குலைந்து போயுள்ளது. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தை இந்த தொடர் கனமழை சீர்குலைத்துள்ளது. இதனால் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ரயில் ஒரு வாரம் ரத்து… தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு!

இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேலும் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்டில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என தெரிவத்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் மற்றும் விதர்பாவில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

‘குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்றேன்’… திருச்சிற்றம்பலம் படக்குழு சந்திப்பு.. உருகிய தனுஷ்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தெலுங்கானா மாநிலம் முழுவதும் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.