ஸ்டாலினை காப்பியடிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்… என்ன செய்திருக்கார் பாருங்க!

சத்தீஷ்கர் தேர்தல்

சத்தீஷ்கர் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் டெல்லி முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது உரையாற்றிய அவர் சத்தீஸ்கர் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

ஆம் ஆத்மி கட்சி சாமானிய மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்சி என்றும், அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினர்ர் அரவிந்த் கெஜ்ரிவால். தொடர்ந்து மற்ற அரசியல் கட்சிகளை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால், மற்ற கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாகவும், தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவிறி விட்டதாகவும் சாடினார்.

இலவச மின்சாரம்

தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அதன்படி சத்தீஸ்கரில் 24 மணி நேர மின்சாரம் வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார், டெல்லி மற்றும் பஞ்சாபில் இந்த சாதனை வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது என்ற அரவிந்த் கெஜ்ரிவால் சத்தீஸ்கரில் தனது அரசு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் என்றார். சத்தீஸ்கரில் நவம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை தள்ளுபடி செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

அதிக ஆசிரியர்கள் நியமனம்

சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால் அவற்றை மாற்றுவதாக உறுதியளித்தார். தனியார் பள்ளிகளில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், அதிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் தரமான கல்வியை உறுதி செய்வதாகவும் கூறிய அவர் ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றார். மேலும் சத்தீஸ்கரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முறையான மருத்துவ வசதிகள் இல்லாதது குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலம் முழுவதும் மொஹல்லா கிளினிக்குகள் நிறுவப்படும் என்று உறுதியளித்தார்.

சந்திரயான் 3: நள்ளிரவில் நடந்த சம்பவம்.. இனி ஒவ்வொரு நொடியும் ரொம்ப முக்கியம்… பரபரப்பில் இஸ்ரோ!

ரூ.3000 உதவி தொகை

சத்தீஷ்கர் மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், வேலையில்லாத நபர்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.3,000 வழங்கப்படும் என்றும் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். லஞ்சம் மற்றும் உறவுமுறைகளுக்கு இடம் அளிக்காமல் அரசு வேலைகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மகளிருக்கு ரூ. 1000

மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்திர உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும், இந்த தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறினார். மேலும் சத்தீஸ்கரில் முதியோர்களுக்கான இலவச யாத்திரை பயணங்களை ஏற்பாடு செய்வதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் உறுதியளித்தார்.

திருப்பதி ரயில் ஒரு வாரம் ரத்து… தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு!

ரூ. 1 கோடி இழப்பீடு

சத்தீஸ்கரில் இருந்து ஊழலை ஒழிப்பதாகவும், வெளிப்படையான நிர்வாகம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலு பணியின் போது உயிர் தியாகம் செய்யும் சத்தீஸ்கரை சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் கவுரவ ஊதியம் வழங்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். சத்தீஸ்கரில் உள்ள அரசு ஊழியர்கள் பணிப் பாதுகாப்பு பெறுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

ஸ்டாலினை போல்

சத்தீஸ்கரில் விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் நலனுக்காக ஆம் ஆத்மி கட்சி பாடுபடும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் மத்தியில் உறுதி அளித்தார். தமிழகத்தில் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். தற்போது அந்த திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் செயல்பட தொடங்கியுள்ளது. மகளிருக்கு 1000 ரூபாய் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் மத்தியில் அந்த திட்டத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது.

‘குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்றேன்’… திருச்சிற்றம்பலம் படக்குழு சந்திப்பு.. உருகிய தனுஷ்!

மக்களை கவரும் வாக்குறுதிகள்

இந்நிலையில் அந்த திட்டத்தை பின்பற்றி சத்தீஷ்கரில் வாக்குறுதியாக அளித்துள்ளார் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். சத்தீஷ்கரில் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளுமே மக்களை கவரும் வகையில் உள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் என்னென்ன வாக்குறுதிகளை அளிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.