ஒரு வாரம் மழை தான்: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முழு விவரம்!

தமிழ்நாட்டில் நேற்று பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சிவகாசியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருத்தணி 10 செ.மீ, அரக்கோணம், ஆர்.கே.பேட்டை, வெம்பகோட்டை ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ, மாயனூர், கிருஷ்ணராயபுரம், நத்தம் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மழை ஒரு பக்கம் பெய்தாலும் பல இடங்களில் வறண்ட வானிலையும் நிலவியது. மாநிலத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்று முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரைக்குமான வானிலை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை ஆறு நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவாரூரில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று முதல் வழங்கப்படும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸாகவும் நாளை 35-36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இன்று 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் நாளை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.